உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 zł. உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் களிடமிருந்து பெறுவதைக்காட்டிலும் தமக்குச் சமமாயுள்ள இளைஞர்களிடமிருந்து அதிகமாய்க் கற்கின்றனர். அ கோல்டுஸ்மித் கலைகள் or உயர்ந்த கலைகள் அனைத்தும் கடவுளின் வேலையில் மனிதனுக்குரிய மகிழ்ச்சியை வெளிக் காட்டுகின்றன. A ரஸ்கின் தெய்விகப் படைப்பின் நிழல்தான் உண்மையான கலைப் படைப்பு. அ மைக்கேல் ஏஞ்சலோ கலையில் நன்மையானவையெல்லாம் ஓர் ஆன்மா மற்றொன்றுக்கு வெளியிடுவதாகும். அதன் அருமை அதை வெளியிடுபவரின் பெருமையைப் பொறுத்தது. அ. ரஸ்கின் கலை, அதன் சக்திக்குத் தகுந்தபடி, இயற்கையைப் பின் பற்றிச் செல்கின்றது. இது சீடன் ஆசிரியரைத் தொடர்வது போன்றது. ஆகவே, இறைவனிடமிருந்து வருவதாகும். அ. தாந்தே கலையின் நிறைவு கலையை (புலப்படாதபடி மறைத்து வைத்தல், அ குவின்டிலியன் கல்விமான்கள் கலையின் காரணத்தைப் புரிந்துகொள்கின்றனர். படிப்பில்லாதவர்கள் மகிழ்ச்சியை மட்டும் உணர்கின்றனர். அ குவின்டிலியன் நாம் கண்களினாலேயே சித்திரம் தீட்ட முடிந்தால் நல்லதுதான் கண் பார்த்தது கையின்மூலம் பென்சிலுக்குப் போய்ச் சேர்வதற்குள் எவ்வளவோ நஷ்டம் ஏற்படுகின்றது அ வெள்ளயிங்