பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் மகிழ்ச்சியாயிருப்பதால்தான்.உலகப் பொருளகள அனைததிலும் அவர்கள் அன்பைத்தான் அதிகமாய்க் காதலிக்கின்றனர். ஆண்கள் என்று தனியாக அவர்கள் விரும்பக்கூடியவர்கள் சிலரே இருப்பர். அ அல்ஃபோன்லேகா

  • பெண்கள் எப்பொழுதும் அமிதமான எல்லைகளிலேயே இருப்பர். அவர்கள் மனிதர்களைவிட ஒன்று, மேம்பட்டவர்களா யிருப்பார்கள் அல்லது தாழ்ந்தவர்களாயிருப்பார்கள்.க புளுயெர்
  • பெண். எந்தக் காற்றிலும் அசைந்தாடிக்கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும் புயலிலும் அவள் ஒடிந்து விழமாட்டாள். அ வேட்வி
  • உலகம் அனைத்தையும் கட்டிக் காப்பாற்றி, அமுதூட்டி வரும் நூல்கள், கலைகள், கலை மன்றங்கள் யாவும் பெண்களே.

அ ஷேக்ஸ்பியர்

  • பெண்களைப் பெருமிதம் கொள்ளச் செய்வது. அழகு; அவர்களை மிகவும் பாராட்டும்படி செய்வது, பண்பு அவர்களைத் தெய்விகமாகத் தோன்றச் செய்வது. அடக்கம்.

அ ஷேக்ஸ்பியர்

  • பெண்கள் நம்மை ஆட்சி புரிகின்றனர். அவர்கள் மேலும் நிறைவுடையவர்களாக விளங்கும்படி செய்வோம். அவர்கள் எவ்வளவுக்கு அறிவொளியைப் பெறுகின்றனரோ, அவ் வளவுக்கு நாம் அறிவு பெறுவோம். பெண்களின் மனங்களைப் பயிற்சி செய்வதையே ஆடவனின் அறிவு பொறுத்திருக்கின்றது.
ைஷெரிடன்
  • மனிதர்கள், பெண்களின் விளையாட்டுக் கருவிகள் பெண், சைத்தானின் விளையாட்டுக் கருவி. க விக்டர் ஹியூகோ
  • தலைசிறந்த பெண் அநேகமாக மனிதனின் வலிமையைப் பெற்றிருப்பாள் தலைசிறந்த மனிதன் பெண்ணின் நயமான இனிமையைப் பெற்றிருப்பான். க. திருமதி முலோக்