பயன்
131
சொல் கடந்து, பொருள் கடந்து,உணர்ச்சி கடந்து, வாழ்க்கையில் நற்பயனைத் தருவதாக அமைந்திருக்கிறது. ஆகவே, அவர் பாடுகின்ற இந்தப் பயன், சொல்லளவில் நில்லாமல் நூற்றுக்கு நூறு உண்மையான நிகழ்ச்சியாக அநுபவத்தில் காண்பதற்குரியது.
★
சலம்காணும் வேந்தர் தமக்கும் அஞ்
சார்;யமன் சண்டைக்கு அஞ்சார்;
துலங்கா நரகக் குழி அணு
கார்;துட்ட நோய் அணுகார்;
கலங்கார் புலிக்கும் கரடிக்கும்
யானைக்கும்; கந்தன் நன்னூல்
அலங்காரம் நூற்றுள் ஒருகவி
தான்கற் றறிந்தவரே.
[தமக்குள்ளே பகையை உண்டாக்கும் கொடுங்கோல் மன்னர்களுக்கும் அஞ்சமாட்டார்கள்; யமன் மரண காலத்தில் வந்து துன்புறுத்தும் சண்டைக்கும் அஞ்சமாட்டார்கள்; ஒளியற்ற நரகமென்ற துன்பக்குழியின் பக்கத்தில்கூடப் போகமாட்டார்கள்; தீர்வதற்கரிய கொடிய நோயை அடையமாட்டார்கள்; புலி கரடி யானை இவற்றுக்கும் கலங்கமாட்டார்கள்; கந்தனைப்பற்றிய நல்ல நூலாகிய இந்த அலங்காரத்தில் உள்ள நூறு கவிகளுக்குள் ஒரு கவியை யேனும் சுற்று அதன் வழி நிற்க அறிந்தவர்கள்.
சலம் - பகை. தமக்கும் என்றது உயர்வு சிறப்பும்மை. வேந்தருக்கே அஞ்சார் என்றால் மற்றவர்களுக்கு அஞ்சாமை சொல்லவேண்டியதில்லை. துலங்கா - ஒளியற்ற; துலக்கம்-ஒளி. நரசுக்குழி: "எரிவாய் நரகக் குழியும்" என்று முன்பும் ஒரு பாட்டில் கூறினார். தான்: அடை.
அறிந்தவர் அஞ்சார், அஞ்சார், அணுகார், கலங்கார் என்று முடியும்.]