பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

9-6-57 - 'ஓம் லேண்டு' ஆங்கிலக் கிழமை இதழ் தொடங்குதல்
2-3-58 - தி.மு.கழகத்தினை மாநிலக் கட்சியாக இந்திய அரசு ஒப்புதல் அளித்தல்.
24-4-59 - அண்ணாவின் தம்பியர் சென்னை மாநகராட்சி மன்ற ஆட்சியில் அமர்தல்.
1-8-60 - இந்தி எதிர்ப்பு மாநாடு செங்கையில் அண்ணா தலைமை உரை
1962 - சம்பத் விலகல் குறித்து அண்ணா அறிக்கை
26-2-62 - சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர் செல்ல, அண்ணா, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராதல்.
2-8-62 - விலைவாசி உயர்வுப்போர் சிறையில் - வேலூர் பத்து வாரம்.
17-11-63 - கட்டாய இந்தி - 17வது மொழிப் பிரிவு சட்டம் எரித்தல்;

16-11-63 அன்றே கைதாகி, ஆறுமாதம் சிறைத்தண்டனை ஏற்றல்.

1-3-67 - தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் 138 பேர் தம்பியருடன் அண்ணா தமிழக முதல்வர் ஆதல்.
14-4-67 - 'தமிழ்நாடு' பெயரிட்டுப் பெருமை பெறல்
10-1-68 - இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு எடுத்தல்
8-9-68 - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்குதல்
4-1-69 - கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் கடைசிச் சொற்பொழிவு.
2-2-69 - புகழ் உடம்பெய்தல்.