இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- அடங்காப் பெண்சாதியால், அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு.
- அடங்கின பிடி பிடிக்க வேணுமேயல்லாமல், அடங்காப்பிடி பிடிக்கலாகாது.
- அடாது செய்தவர், படாது படுவர்.
- அடி அதிரசம், குத்து கொழுக்கட்டை.
- அடிக்கடிக்கப் பந்து அதிக விசை கொள்ளும்.
- அடிக்காயிரம் பொன், கொடுக்க வேணும்.
- அடிக்கிற காற்றுக்கும் பேய்கிற மழைக்கும் பயப்படு.
- அடிக்கிற காற்று, வெயிலுக்குப் பயப்படுமா?
- அடிக்கும் ஒரு கை, அணைக்கும் ஒரு கை.
- அடிக்கும் பிடிக்கும் , சரி.
- அடிச்சு விட்டவன் பின்னே போனாலும், பிடிச்சு விட்டவன் பின்னே போகலாகாது.
- அடித்த ஏருக்கும் வார்த்த கூழுக்கும். சரி.
- அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும், செவ்வையாகாது.
- அடி நாக்கிலே நஞ்சும். நுனி நாக்கிலே அமுதுமா?
- அடி நொச்சி, நுனி ஆமணக்கா?
- அடிப்பானேன், பிடிப்பானேன்? அடக்குகிற வழியிலே அடக்குவோம்.
- அடிமேலடி விழுந்தால், அம்மியும் நகரும்.
- அடிமை படைத்தால், ஆள்வது கடன்.
- அடியற்ற பூனைப்போல விழுந்தது. (பூணைப்போல)
- அடியற்ற மரம்போலே அலறி விழுகிறது.
- அடியாத மாடு படியாது.
- அடியுதவுகிறாப்போலே, அண்ணன் தம்பி யுதவான்.
- அடியென்கப் பெண்சாதியில்லை, அஷ்ட புத்திர வெகுபாக்கிய நமஸ்து.
- அடியென்றழைக்கப் பெண்டாட்டியில்லை, பிள்ளை யெத்தனை, பெண்ணெத்தனையென்கிறான்.
- அடியைத் தொடுடா, பாரதபட்டா.
- அடியொட்டிலே, கரணம்போடப் பார்க்கிறான்.
- அடியோட்டியல்லோ, மேற்கரணம் போடவேணும்.
- அடிவண்டிக் கிடாப்போலே.
4