இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- அண்ணாக்குந் தொண்டையும், அதிர அடைச்சுது.
- அண்ணாண்டி வாரும், சண்டையை ஒப்புக்கொள்ளும்.
- அண்ணா மலையாருக்கு அறுபத்தினாலு பூசை,ஆண்டிகளுக்கு
- எழுபத்தினாலு பூசை.
- அண்ணாமலையார் அருளுண்டானால், மன்னார்சாமி மயிரைப் பிடுங்குமா?
- அண்ணாவுக்கு மனது வரவேணும், மதனி பிள்ளை பெறவேணும்.
- அண்ணு கண்டனர். இண்ணு வந்தனர்.
- அண்ணு கழி, அன்று கழி.
- அண்ணு குடிக்கத் தண்ணியில்லை, ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
- அண்ணைக்காடை, இண்ணைக்குக்கோடை, எண்ணைக்கு விடியும் இடையன் தரித்திரம்?
- அண்ணைக்கெழுதினதை. அழித்தெழுதப்போறானா?
- அதிக ஆசை. அதிக நஷ்டம்.
- அதிக ஆசை. மிகு தரித்திரம்.
- அதிகக் கரிசனமானாலும், ஆம்படையானை. அப்பா வென்கலாமா?
- அதிகாரமில்லாவிட்டால், பரியாரம் வேணும்.
- அதிகாரியுடனே, எதிர் பண்ணலாமா?
- அதிகாரியுந் தலையாரியுங் கூடினால், விடியுமட்டுந் திருடலாம்.
- அதிகாரி வீட்டில் திருடி, தலையாரி வீட்டில் வைத்தது போல்.
- அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை, குடியானவன் வீட்டு அம்மிகல்லை உடைத்துதாம்!
- அதிக்கிரமமான ஊரிலே, கொதிக்கிற மீனும் சிரிக்கிறதாம்!
- அதிஷ்டம். ஆறாய்ப் பெருகுகிறது.
- அதிஷ்டங்கெட்ட கழுக்காணி.
- அதிஷ்டங்கெட்ட துக்குறிக்கு, அறுபது நாழியுங் தியாச்சியம்
- அதிஷ்டமில்லாதவனுக்குக் கலப்பால் வந்தாலும், பூனை குடிக்கும்.
- அதிஷ்டவான் மண்ணைத்தொட்டாலும், பொன்னாகும்.
- அதியாக்குதியால், கருமாரிப்பாய்ச்சல்.
7