இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- அம்மி முடுக்கோ அரைப்பவள் முடுக்கோ?
- அம்மி யிருந்து. அரணை யழிப்பான்.
- அம்மைக் கமக்களம், ஆக்கிப்படை எனக்கமக்களம் பொங்கிப்படை.
- அம்மையார் அரைக்காசு அவளுக்குத் தலைசிரைக்க, முக்காற்காசு.
- அம்மையார் நூற்கிற நூலுக்கும், பேரன் அரைஞாண் கயிற்றுக்குஞ்சரி.
- அம்மை வீட்டுத் தெய்வம், நம்மை விட்டுப் போமா?
- அயனிட்ட எழுத்தில், அணுவளவுந் தப்பாது.
- அயனிட்ட கணக்கு, ஆருக்குத் தப்பாது.
- அயோக்கியர் அழகு. அபரஞ்சிச் சிமிளில் நஞ்சு.
- அய்யா, அய்யா, அம்மா குறைக்கேழ்வரவு மரைக்க வரச்சொன்னாள்.
- அய்யா சாமிக்கிக் கலியாணம் - அவரவர் வீட்டிலே சாப்பாடு, கோவிலிலே கொட்டு முழக்கு, கடையிலே பாக்கு வெற்றிலை.
- அய்யா தாசி கவனம்பண்ண, அஞ்சாளின் சுமையாச்சுது.
- அய்யா பாட்டுக்கு, அஞ்சடியும் ஆறடியுந் தாண்டும்.
- அரகராவென்கிறது பெரிதோ, ஆண்டிக்கிடுகிறது பெரிதோ?
- அரகரா வென்கிறவனாக்குத் தெரியுமா. அமுது படைக்கிறவனுக்குத் தெரியுமா?
- அரங்கின்றி வட்டாடலும், அறிவின்றிப் பேசலும் ஒன்று.
- அரசனில்லாப் படை. வெட்டுவதரிது.
- அரசனுக்கொரு சொல், அடிமைக்கு தலை சுமை.
- அரசனும் அரவும், சரி.
- அரசனைக் கண்ட கண்ணுக்குப் புருஷனைக் கண்டால், கொசுப் போல் இருக்குது.
- அரசனை நம்பி, புருஷனைக் கைவிட்டாற்போலே.
- அரசன் அண்ணு கொல்வான், தெய்வம் நிண்ணு கொல்லும்.
- அரசன் கல்லின் மேல் வழுதுணை காய்க்குமென்றால், கொத்தாலாயிரங் குலையாலாயிர மென்பார்கள்.
- அரசன் வழிப்பட்டது அவனி.
- அரசில்லா நாடு, அலக்கழிந்தாற்போலே.
- அரணை, அலகு திறக்காது.
- அரணை கடித்தால், மரணம்.
10