இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- அக்கிராரத்து நாய், பிரதிஷ்டைக்கு அழுதது போல.
- அக்கினி தேவனுக்கு, அபிஷேகஞ் செய்தது
- போலிருக்கிறது.
- அக்கினிப் பந்தலிலே, வெண்ணெய்ப்பதிமை ஆடுமா?
- அக்கினி மலையிலே, கற்பூரப்பாணம் பிரயோகித்தது
- போல்.
- அக்கினியினிடத்தில் அடுக்காதுபோலும். அகலாது
- போலும்.அரசரை சினேகிக்க வேணும்.
- அக்கினியைத்தின்று கக்குகிற பிள்ளை, அல்லித்
- தண்டைத் தின்கிறது அதிசயமா?
- அக்குத்தொக்கில்லாதவனுக்கு, துக்கமென்ன?
- அக்குத்தொக்கில்லாதான் ஆண்மையும், வெட்கஞ்சிக்
- கில்லாதான் றோஷமும், மிக்கத் துக்கப்படாதான்
- வாழ்வும். நாய் கக்கி நக்கித் தின்னத்துக்கொக்கும்.
- அங்கங்குங் குறுணி, அளந்து கொட்டியிருக்குது.
- அங்காங்க வைபோகமாயிருக்கிறான். அரைக்காசும்
- முதலில்லை .
- அங்காடி விலையை, அதிர அடிக்காதே.
- அங்காளம்மைத்தெய்வம். அகப்பைக் கூறு வழியாய்
- வரும்.
- அங்கிடு தொடுப்பிக்கு, அங்கிரண்டு குட்டு இங்கிரண்டு
- சொட்டு.
- அங்கு தப்பி. இங்கு தப்பி, அகப்பட்டுக் கொண்டான்
- திம்மட்டி ராயன்.
- அங்குமிருப்பாள் இங்குமிருப்பாள், ஆக்கின
- சோற்றிற்குப் பங்குமிருப்பாள்.
- அங்கேண்டி மகளே கஞ்சிக்கழுகிறாய். இங்குவாடி
- காற்றாய்ப்பறப்பாய்.
- அசலாருடைமைக்கு பேயாய்ப்பறக்கிறது.
- அசலும் பிசலும் அறியாமல். அடுத்தாரைக் கெடுக்கப்
- பார்க்கிறான்.
- அசல் வீட்டுக் காரனுக்குப் பரிந்து கொண்டு,
- ஆம்படையானை அடித்தாளாம்.
- அசல் வீட்டுக்குப்போற பாம்பை. கையாலே பிடிக்கான்.
- அசைப்புக்காயிரம் பொன். வாங்குகிறது.
- அச்சமற்றவன், அம்பலமேறுவான்.
- அச்சம், ஆண்மை குலைக்கும்.
- அச்சாணியில்லாத்தேர். முச்சாணுமோடாது.
2