பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

丑建教 ஊருக்குள் ஒரு புரட்சி கொண்டார்கள். சூழ்ந்தவர்களில் ஒருவர் "சின்னான்... எங்களயும் கவனிக்கனும்... நஷ்ட ஈடு வாங்கித் தரணும். நஷ்டஈடுன்னு ஒண்ணு இருக்கதே இப்பதான் எங்களுக்குத் தெரியும்" என்றார்கள். சின்னான். கண்களைச் சிமிட்டிக் கொண்டே பதிலளித்தான். "வாங்கலாம். ஆனால் ஊரு சரியா இல்லியே ஒவ்வோரு கம்பா ஒடிச்ச அண்ணன் தம்பிங்க... ஒரு கட்டுக்கம்ப ஒடிக்க முடியாமப் போனதை பள்ளிக்கூடத்துல படிச்சோம். புள்ளிக்கு உதவலியே..." "அப்படிச் சொல்லாத.... இப்ப நாங்க... ஒன் பின்னால நிக்கலியா... எதுலயும் துரோகிப் பயலுவ இருப்பாங்க... அவங்கள கணக்குல சேக்காத..." "என்னாத்த சேத்து என்ன பண்ண. ஆண்டியப்பன்... லாக்கப்புல இருக்கானாம். கோபால போலீஸ் மதுரையில மடக்கி.... லாக்கப்புல போட்டிருக்காம்..." "அட கடவுளே... இத விடப்படாது சின்னான்... பரமசிவம் இருக்கும்போது மட்டும் சொல்லியிருந்தே... அவன பிச்சி எடுத்திருப் போம்... ஊரோட முதல் மானஸ்தன் ஆண்டியப்பன். சின்னான்.... சின்னான்... நீதான் எதாவது பண்ணனும்..." "சரி... கலெக்டருக்கு ஒரு மனு எழுதுவோம். கையெழுத்துப் போடுங்க... இப்பவே ஒரு லாரியப் புடிச்சி. ஆலங்குளத்துல எங்க அக்காவப் பார்த்துட்டு காலையில... திருநெல்வேலிக்குப் போயிட்டு மதுரைக்கும் போயிட்டு வாரேன்... நயினாரம்மா... ராமாயி... இந்தாங்க... பணத்த வாங்கிக்கங்க... பிச்சாண்டி, இதக் கொடு..." பிச்சாண்டி, இரண்டு அமங்கலிகளின் கைகளிலும் பணத்தை வைத்தபோது, இடும்பன்சாமி, சின்னான் சொல்லச் சொல்ல எழுதினார். எழுதி முடித்ததும். சின்னான். தங்கம்மாவின் அம்மாவைப் பார்த்து "நீங்க மொதல்லே போடுங்க... ஒங்க மருமகன் சந்தேகப்படுவார்" என்றான். "கையெழுத்துப் போடத் தெரிஞ்சிருந்தா... என் தலயிலயே... நான் கொள்ளி வைப்பனா..." "பரவாயில்ல... இப்டி வாங்க..." சின்னான். கிழவியின் பெருவிரல் ரேகையைப் போட்டான். தங்கம்மா, இரண்டாவதாகக் கையெழுத்துப் போட்டாள். பழ கிழவிகள் "கீறலுக்கு காகிதத்தைக் கீறுவதுபோல் தேய்த்தார்கள். எல்லோரும் கையெழுத்துப் போட்டார்கள். சண்முகக்கோனார். கடைப்பக்கம் நின்றவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து கையெழுத்து வாங்கினார். சின்னான். மனுவை எடுத்து, பைக்குள் வைத்துக் கொண்டு. ஆசாரிப்பையன் ஆறுமுகத்தை "கோணச்சத்திரம் வரைக்கும் சைக்கிளில் விடுறியா" என்றபோது, பையன், வீட்டுக்கு ஓடினான் - யார் சைக்கிளையோ உருட்டி வர.