பக்கம்:எக்கோவின் காதல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

11


• ‘கல்வி உலகக் கவியரசு’ விருது - அகில இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், (அழகப்பா பல்கலைக் கழகம்) காரைக்குடி - 1996

• "பொற்கிழி’ பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க் கல்லுரி, மேலைச்சிவபுரி - 1997

• 'கலைமாமணி’ விருது - பொற்பதக்கம் - செல்வி பாத்திமா பீவி, ஆளுநர், கலைஞர் மு.கருணாநிதி, முதலமைச்சர், தமிழ்நாடு அரசு, சென்னை - 1998.

பிற குறிப்புகள்

• 21ஆம் அகவையில் இயற்றிய சாதி என்பது நமக்கு ஏனோ? என்ற கவிதையே முதல்முதலில் அச்சு வாகனம் ஏறியது. இது பேரறிஞர் அண்ணாவால் திராவிட நாடு இதழில் வெளியிடப்பட்டது (1940).

• தந்தை பெரியாரின் தன்மான இயக்கத் தொடர்பு (1940)

• "சாதி மறுப்புத் திருமணம் செய்யவாவது இசைவு கொடுங்கள்" என அன்னையாரிடம் வேண்டுதல், பெற்றோர் இசைதல். பெற்றோர் மூலம் ஞகலைச்செல்விஞ எனும் நலத்தகையாரை பேராசிரியர் மயிலை சிவமுத்து தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார் (1949)

• திருமணமான ஆண்டே தமது துணைவியாருடன் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றார் (1949)