பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி. என். அண்ணாதுரை 25 மடைமை ஆகுமா? என்று கேட்டார், மார்டின் லூதர் - கால்வின். ஜிவிங்லி. போன்ருகும் இதையே கூறினர் மக்கள் முதலில் மருண்டனர். பிறகு "ஆமாம், இந்த மடைமை ஆகாது. நமக்கு மோட்ச வழி காட்டியாக நாம் ஒரு தூய்மையாளரைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினர் ; லூதர் வென்றார். .. "பாவத்துக்குப் பரிகாரம், மனதால் கழுவாய் தேடுவது தானே - காணிக்கை கொடுத்தால் பாவம் மறையுமோ! மறையும் என்று வாணிபம் செய்கிறார் மத அதிபர் ! ஏற்றுக் கொள்கிறீர்களே. ஆராய்ந்து பாராமல். காணிக்கை கொடுத் துப் பாவத்தைக் கழுவிக்கொள்ள முடியுமானால். பணக் காரன், கொலை, கொள்ளை, எனும் எந்தப்பாவமும் புரிய லாம். தப்பித்துக்கொள்ளலாம். அல்லவா? .இதுவா அறம்? இதுவா மார்க்கம்? இதுவா கர்த்தரின் கட்டளை ? இதுவா சுவிசேஷம்?" என்று கேட்டனர். பிராடெஸ்ட்டென்ட் இயக்கத்தினர் - மக்கள், தெளிவு பெற்றனர் துணிந்து போப்பாண்டவரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டனர். இந்த அளவுக்குத்தான் மக்கள் தயாராயினர். ந்து கயமையைக் கண்டிக்கவும் தூய்மையைப் போற்றவும் முன்வந்தனர். மத அதிபர்கள், மாசுமருவற்றவர்களாக இருத்தல் வேண்டும் - ஒழுக்க சீலர்களாக விளங்க வேண்டு என்று கோரத் தலைப்பட்டனர். ப்ருனோ. மத அதிபர்கள், எப்படி இருக்கவேண்டும். கயமை நிரம்பியவர்கள் கூடாதல்லவா, தூய்மை உள்ளவர் கள்தானே தொழுகை நடாத்தும் தகுதியுடையார். என்ற