பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


மற்ற எந்தக் கட்சிக்கும் ஏற்படாத ஆபத்து, கழகத்துக்கு வருகிறது; கழகத்தின் மூலாதாரக் கொள்கை பேசுவதற்கே உரிமை இல்லை – மறுக்கப்படுகிறது.

அடக்குமுறையைத் தாங்கிக் கொள்ள முடிகிறதா இல்லையா என்பதல்ல, நமக்கு ஏற்படும் கேள்வி - அடக்குமுறையைத் தாங்கிக் கொண்டாலும், நமக்கு நமது மூலாதாரக் கொள்கை பற்றிப் பேசும் உரிமையும், அதற்காக