பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193

ஏற்பட்டுள்ள விழிப்பையும், எழுச்சியையும் பார்த்து, மக்களை ஓரளவுக்காகிலும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அந்த கட்சிகள், தென்னாட்டுக்கு பொருளாதார வளர்ச்சி வேண்டும், உரிய பங்கு வேண்டும் என்று பேசுகின்றன. தி.மு. கழகம் இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டால், அந்தப் பேச்சையும் அந்தக் கட்சிகள் விட்டுவிடும். தென்னாட்டின் உரிமைகளுக்காக வாதிட ஒரு கட்சியும் முன் வராது.