பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

யாகி விட்டோம் என்று பெரியார், பலத்த பிரசாரம் செய்தார் – மிகக் கேவலமான முறையிலே பேசினார் – நாம் பயந்துவிடவுமில்லை – நமது வளர்ச்சி பாதிக்கப்படவுமில்லை. நாம் பார்ப்பனருக்கு அடிமையாகிவிடவும் இல்லை - பார்ப்பனருக்குக் கடைசியில் ஓட்டு சேகரிக்க ஊரூராக சென்றவர் பெரியாரே தவிர நாம் அல்ல.