பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


சொன்னதன் பொருளும் இதை ஒட்டித்தான்; அடக்குமுறைக் கொடுமையை ஏற்றுக்கொள்ள ஏற்றுக்கொள்ள, கொள்கையிடம் மக்கள் காட்டும் ஆதரவு பெருகும், அதன் காரணமாக கழகம் செல்வாக்குப் பெறும், அந்தச் செல்வாக்கு காரணமாக, திராவிடநாடு கொள்கை வெற்றி அடையும் என்பதுதான் பொருள்.

சந்தனம், அரைக்கப் படாமல், நெருப்பில் வீசப்படுமானால், கிளம்பிடும் மணம் பயன் தருவதாக அமையாது.