பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா o 3. § 7 இங்கே தவங்கள் எதற்காக? என்று ஜப்பானிய ஹைக்கூ மாதிரி இறுக்கமாக அமைந்த 'திட்டங்கள் என்னும் அப்துல் ரகுமானின் கவிதை முரண்தொடை உருவத்தைச் செம்மையாகச் சித்தரிக்கிறது. கீர்த்தனத்தின் முதலுறுப்பாகிய பல்லவி இடையிலும் இறுதியிலும் பாடப் படுவதைப்போல் புதுக்கவிதைகள் சில ஏதேனும் ஒரு வரியைப் பல்லவியாகக் கொண்டு அமைவதுண்டு. எவ்வளவு நீண்ட கவிதையாக இருந்தாலும் திரும்பத்திரும்ப அந்த முதல் வரியோ வரிகளோ அமைந்திருக்கப் படிக்கும்போது இசையின்பம் கிட்டுகிறது. சிற்பியின் 'அகலிகை இன்னும் காத்திருக் கிறாள்' என்ற கவிதையும் அபியின் ஒரு நம்பிக்கை செத்துக் கிடக்கிறது', 'ஒரு முறையாவது பூக்கும் என்ற கவிதைகளும் எந்தக் கண்ணன் இங்குப் பிறந்தால் என்ற கங்கைகொண்டான் கவிதையும் இசைப்பா உருவக் கவிதைகள் எனலாம். எங்கள் மாதரசியின் மானங்காக்க வேண்டுமெனில் எந்தக் கண்ணன் இங்கு பிறந்தால் துச்சாதனக்கரங்கள் துவண்டு விழும்? இதில் எந்தக் கண்ணன் இங்குப் பிறந்தால் என்னும் வரி இதேபோல் முன்னும் பின்னும் அமைந்து கவிதையின் ஒட்டத்துக்குத் துணையாகிறது. 3:115Tuigcir sarjana analig John Updike Pendulam' என்று ஒரு கவிதை எழுதியுள்ளார். இதில் உள்ள நான்கு வரிகளும் வழக்கம்போல் வரிசையாக இல்லாமல் மேலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருப்பது போலவும்