பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதையின் எதிர்காலம் கருவறையிலிருந்து வந்தவுடனேயே கல்லறைக்குப் போய்விடும் என்று ஆருடம் சொன்னவர்கள் அதிசயிக்கத் தக்க வகையில் புதுக்கவிதை இன்று கம்பீரமாக ஊர்வலம் வருகிறது. பத்திரிகைகள் பன்னீர் தெளிக்க, பதிப்பகங்கள் மலர்தூவ மன்றங்கள் வாழ்த்தி வரவேற்கின்றன.