பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

பூங்கோதை—பொன்முடி

பூங்கோதை வருகின்றாள் புனிதையோடு!
பொன்முடியோ எதிர்பாரா விதமாய், முத்து
வாங்கப் போ கின்றான் அவ் வழியாய் ! வஞ்சி,
வருவோனைத் தூரத்தில் பார்த்தாள்; அன்னோன்
பூங்கோதை யா என்று சந்தே கித்தான்!
போனவரு ஷம்வரைக்கும் இரண்டு பேரும்
வாங்காத பண்டமில்லை; உண்ணும் போது
மனம் வேறு பட்டதில்லை. என்ன ஆட்டம்!

அத்தான் என் றழைக்காத நேர முண்டா!
அத்தை மகளைப்பிரிவா னாஅப் பிள்ளை !
இத்தனையும் இரு குடும்பம் பகையில் மூழ்கி
இருந்ததனை அவன் நினைத்தான்; அவள் நினைத்
                                              [தாள்!
தொத்துகின்ற கிளிக்கெதிரில், அன்னோன் இன்
                                            [பத்
தோளான மணிக்கிளையும் நெருங்க-மேலும்
அத்தாணி மண்டபத்து மார்பன் அண்டை
அழகிய பட்டத்தரசி நெருங்க லானாள்!

9