6
நள்ளிருளில் கிள்ளை வீட்டிற்கு!
நீலம் கரைத்த நிறைகுடத்தின் உட்புறம்போல்
ஞாலம் கறுப்பாக்கும் நள்ளிருளில்—சோலைஉதிர்
பூவென்ன மக்கள் துயில்கிடக்கும் போதில்,இரு
சீவன்கள் மட்டும் திறந்தவிழி—ஆவலினால்
மூடா திருந்தனவாம்! முன்னறையில்
பொன்முடியான்
ஆடா தெழுந்தான் அவள் நினைப்பால்!—ஓடைக்குள்
காலால் வழி தடவும் கஷ்டம்போல், தன்உணர்வால்
ஏலா இருளில் வழிதடவி—மேல் ஏகி,
வீட்டுத் தெருக்கதவை மெல்லத் திறந்திருண்ட
காட்டில்இரு கண்ணில்லான் போதல்போல்....
பேட்டை
அகன்றுபோய், அன்னவளின் வீட்டினது
தோட்டம்
புகும்வாசல் என்று புகுந்தான்—புகும் தருணம்
வீணையிலோர் தந்தி மெதுவாய் அதிர்ந்ததுபோல்,
ஆணழகன் என்றெண்ணி “அத்தான்” என்—றாள்
நங்கை!
ஓங்கார மாய்த்தடவி அன்பின் உயர்பொருளைத்
தாங்கா மகிழ்ச்சியுடன் தான்பிடித்துப்....
பூங்கொடியை
மாரோ டணைத்து, மணற்கிழங்காய்க் கன்னத்தில்
வேரோடு! முத்தம் பறித்தான் ! அந்-நேரத்தில்,
18