இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
துன்பந் தடுக்கத் துடித்தாளே!—ஐயகோ,
இன்ப உடலில் அடியேற்றாளே!—அன்புள்ள
காதலிக் கின்னும்என்ன கஷ்டம் விளைப்பாரோ!
மாது புவிவெறுத்து மாய்வாளோ!—தீதெல்லாம்
என்னால் விளைந்ததனால் என்னைப் பழிப்பாளோ!”
என்று, தன் துன்பத்தை எண்ணாமல்—அன்னாள்
நலமொன்றே பொன்முடியான் நாடி நடந்தான்
உலராத காயங்க ளோடு!
20