இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7
பண்டாரத்தைக் கண்டாள் தத்தை
பண்டாரம் இரண்டு நாளாய்ப்
பூங்கோதை தன்னைப் பார்க்கத்
திண்டாடிப் போனான்! அந்தச்
செல்வியும் அவ்வாறே யாம்!
வண்டான விழியால், அன்னாள்
சன்னலின் வழியாய்ப் பார்த்துக்
கொண்டிருந்தாள், பண்டாரம்
குறட்டினிற் போதல் பார்த்தாள்.
ருமினாள், திரும்பிப் பார்த்தான்!
தெருச்சன்னல் உள்ளிருந்தே,
ஒருசெந்தா மரை இதழ்தான்
தென்றலால் உதறல் போல,
வருக என் றழைத்த கையை
மங்கை கை என்றறிந்தான்.
“பொருளை நீர் கொள்க இந்தத்
திருமுகம் புனிதர்க்” கென்றே
21