பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகர்ந்தனள்,போவீர் போவீர்
எனச்சொல்லிப் பறந்தாள்! அன்னோன்,

மிகுந்த சந்தோஷத்தோடு
"மெல்லியே என்ன சேதி?

புகலுவாய்” என்று கேட்டான்.
புகலுவ தொன்று மில்லை

அகன்று போ வீர்; எனக்கே
பாதுகாப் பதிகம்“ என்றாள்.

“சரிசரி ஒன்றே ஒன்று
தாய் தந்தைமார் உன் மீது

பரிவுடன் இருக்கின்றாரா?
பகை யென்றே நினைக்கின்றாரா?

தெரியச் சொல்“ என்றான், அன்னாள்
“சீக்கிரம் போவீர்“ என்றாள்.

“வரும்படி சொல்ல வா உன்
மச்சானை“ என்று கேட்டான்.

“விவரமாய் எழுதியுள்ளேன்
விரைவினிற் போவீர்“ என்றாள்,

“அவரங்கே இல்லா விட்டால்
ஆரிடம் கொடுப்ப“ தென்றன்.

“தவறாமல் அவரைத் தேடித்
தருவதுள் கடமை“ என்றாள்.

“கவலையே உனக்கு வேண்டாம்
நான் உனைக் காப்பேன். மேலும்........“

22