பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்றின்னும் தொடர்ந்தான்.
“என்அன்னை வருவாளையா

முன்னர் நீர் போதல் வேண்டும்“
என்று தன் முகம் சுருக்கிப்

பின்புறம் திரும்பிப் பார்த்துப்
பேதையும் நடுங்க லுற்றாள்.

“கன்னத்தில் என்ன“ என்றன்
“காயம்” என் றுரைத்தாள் மங்கை

“தக்கதோர் மருந்துண்“ டென்றான்.
“சரி சரி போவீர்“ என்றாள்.

அக்கணம் திரும்பினாள்; பின்
விரல்தொடித் தவளைக் கூவிப்,

“பக்குவ மாய் நடக்க
வேண்டும் நீ“ என்றான், பாவை

திக்கென்று தீப் பிடித்த
முகங்காட்டச் சென் றெழிந்தான்.

23