இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
அவள் எழுதிய திருமுகம்
பொன்முடி கடையிற் குந்திப்
புறத் தொழில் ஒன்று மின்றித்,
தன்மனத் துட்புறத்தில்
தக தக என ஒளிக்கும்
மின்னலின் கொடி நிகர்த்த
விசித்திரப் பூங்கோதைபால்
ஒன்று பட்டிருந்தான் ! கண்ணில்
ஒளியுண்டு; பார்வை யில்லை!
கணக்கர்கள் அங்கோர் பக்கம்
கடை வேலை பார்த்திருந்தார்.
பணம் பெற்ற சந்தோஷத்தால்
பண்டாரம் விரைந்து வந்தே
மணிக்கொடி இடையாள் தந்த
திருமுகம் தந்தான்; வாங்கித்.
தணலிலே நின்றிருப்போர்
தண்ணீரில் தாவுதல்போல்,
24