பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுத்தினை விழிகள் தாவ
இதயத்தால் வாசிக்கின்றான்.

“பழத்தோட்டம் அங்கே; தீராப்
பசிகாரி இவ்விடத்தில்!

அழத்துக்கம் வரும் படிக்கே
புன்னையில் உம்மைக் கட்டிப்

புழுதுடி துடிப்ப தைப்போல்
துடித்திடப் புடைத்தார் அந்தோ!

புன்னையைப் பார்க்குந் தோறும்
புலனெலாம் துடிக்க லானேன்;

அன்னையை, வீட்டிலுள்ள,
ஆட்களை, அழைத்துத் தந்தை

என்னையே காவல் காக்க
ஏற்பாடு செய்து விட்டார்!

என் அறை தெருப் பக்கத்தில்
இருப்பது நானோர் கைதி!

அத்தான்!என் ஆவி உங்கள்
அடைக்கலம்! நீர் மறந்தால்

செத்தேன்! இஃதுண்மை. இந்தச்
செகத்தினில் உம்மை அல்லால்

சத்தான பொருளைக் காணேன்!
சாத்திரம் கூறுகின்ற

பத்தான திசை பரந்த
பரம் பொருள் உயர்வென்கின்றார்.

25