பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்பொருள் உயிர்க் குலத்தின்
பேரின்பம் ஆவ தென்று

செப்புவார் பெரியார் யாரும்
தினந்தோறும் கேட்கின்றோமே;

அப்பெரி யோர்க ளெல்லாம்
—வெட்கமாய் இருக்கு தத்தான்—

கைப்பிடித் தணைக்கும் முத்தம்
ஒன்றேனும் காணார் போலும்!

கனவொன்று கண்டேன் இன்று
காமாட்சி கோயி லுக்குள்

என தன்னை, தந்தை, நான், இம்
மூவரும், எல்லா ரோடும்

தொன தொன என்று பாடித்
துதி செய்து நிற்கும் போதில்,

எனது பின் புறத்தில் நீங்கள்
இருந்தீர்கள் என்ன விந்தை!

காய்ச்சிய இரும்பாயிற்றுக்
காதலால் எனது தேகம்!

பாய்ச்சலாய்ப் பாயும் உம்மேல்
தந்தையார் பார்க்கும் பார்வை!

கூச்சலும் கிளம்ப, மேன் மேல்
கும்பலும் சாய்ந்த தாலே,

ஓச்சாமல் உம்தோள் என்மேல்
உராய்ந்தது சிலிர்த்துப் போனேன்!

26