பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


எதிர்பாராப் பிரிவு


பொதி சுமந்து மாடுகளும் முன்னே போகப்
போகின்றார் வடதேசம் வணிகர் பல்லோர் !

அதிசயிக்கும் திருமுகத்தான், பூங்கோ தைபால்
ஆவிவைத்தோன், பொன்முடியான் அவர்களோடு

குதிகாலைத் தூக்கி வைக்கத் துடித்துக், காதல்
கொப்பளிக்கும் மனத்தோடு செல்ல லுற்றன்.

மதிமுகத்தாள் வீடிருக்கும் மகரவீதி
வந்துநுழைந் ததுமுத்து வணிகர் கூட்டம்.

வடநாடு செல்கின்றற வணிகர்க் கெல்லாம்
மங்கையரும் ஆடவரும் வீதி தோறும்,

"இடசொன்றும் நேராமல் திரும்ப வேண்டும்”
என்றுரைத்து வாழ்த்த லுற்றர் ! மாடிமீது,

சுடர்ஒன்று தோன்றிற்றுப் பொன்மு டிக்கே
துடயாஒன்று தோன்றிற்றுக், கண்ணீர் சிந்த,


அடர்கின்ற பூங்கொடியை விழிக் குறிப்பால்,
"அன்பேநீ விடைகொடுப்பாய் " என்று கேட்டான்

42