என்று பலவா றழுதாள். பின் அவ்விரவில்
சென்றுதன் தோட்டத்திற் சேர்த்தாள். இப்
புன்னை தனைக்
கோதைகண்டாள் தன்னுட் குலையதிர்ந்தாள்
தாங்க த
வாதைகண்டாள். ஓடி மரத்தைத் தழுவித், தன்
கூந்தல் அவிழக் குளிர்விழியில் நீர்பெருக,
ஆந்தைபோல் தந்தை அலறி மிலாரெடுத்துப்
பொன்னுடம்பு நோகப் புடைக்க, அவரைப்
பிணித்த
யுன்னை, இதுதான்! புடைத்ததுவும் இவ்விருள்
தான்!
தொட்டபோ தெல்லாம் சுவையேறும்
நல்லுடம்பை—
விட்டபோ தின்ப வெறியெடுக்கும் காதல்
மெய்யைக்—
கட்டிவைத்த காரணத்தால், புன்னை நீ காரிகை
நான்.
ஒட்டுறவு கொண்டுவிட்டோம் தந்தை ஒரு
பகைவன்!
தாயும் அதற்குமேல்! சஞ்சலந்தான் நம்கதியோ?
நோயே உணவு? நாம் நூற்றாண்டு வாழ்வோமோ?
சாதல் தமைமறக்கத் தானென்ன காரணமோ!
ஏதோ அறியேன் இனி
47