பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


ஆசைக்கொரு பெண்


புன்னையில் அவளு டம்பு
புதைந்தது! நினைவு சென்று,
கன்னலின் சாறு போலக்
கலந்தது செம்ம லோடு!
சின்னதோர் திருட்டுமாடு
சென்றதால், அதைப் பிடித்துப்
பொன்னன் தான் ஓட்டி வந்தான்;
புன்னையில் கட்டப் போனான்.

கயிற்றெடு மரத்தைத் தாவும்
பொள்னளின் கையில், தொட்டுப்
பயிலாத புதிய மேனி
பட்டது. சட்டென் றங்கே
அயர்கின்ற நாய்கணைப் போய்
அழைத்தனன்; நாய்கன் வந்தான்
மயில்போன்ற மகளைப், புன்னை
மரத்தோடு மரமாய்க் கண்டான்.

48