இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
பறந்தது கிள்ளை
விடியுமுன் வணிகர் பல்லோர்
பொதிமாட்டை விரைந்தே ஓட்டி
நடந்தனர் தெருவில் ! காதில் கேட்டனள் நங்கை, நெஞ்சு
திடங்கொண்டாள், வேண்டும் சில ஆடை, பணம், எடுத்துத்
தொடர்ந்தனள் அழகு மேனி தோன்றாமல் மூக்கா டிட்டே !
வடநாடு செல்லும் முத்து வணிகரும் காணா வண்ணம்
கடுகவே நடந்தாள், ஐந்து காதமும் கடந்த பின்னர்,
நடைமுறை வரலா றெல்லாம் நங்கையாள் வணிக ருக்குத்
தடையின்றிக் கூ கூற லானாள்'
தயைகொண்டார் வணிகர் யாரும்
51