பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

வடநாடு செல்லும் வணிகர்.


பளிச்சென்று நிலா எறிக்கும்
இரவிளில் பயணம் போகும்
ஒளிச்செல்வ வணிகர்க் குள்ளே
ஒரு தெஞ்சம். மகாவீதி
கிளிச் சந்த மொழியாள் மீது
கிடந்தது. வணிக ரோடு
வெனிச்சென்ற அன்னோன் தேகம்
வெறுந் தேகம் ஆன தன்றே!

வட்ட நன் மதியி லெல்லாம்
அவள் முக வடிவங் காண்பான்!
கொட்டிடும் குளிரில் அப் பூங்
கோதை மெய் இன்பங் காண்பான்!
எட்டு மோர் வானம் பாடி
இன்னிசை தன்னி லெல்லாம்
சுட்டிக் கரும்பின் வாய்ச்சொற்
கவிதையே கண்டு செல்வான்

52