இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆரியப் பெரியோர்; தாடி
அழகுசெய் முகத்தோர், யாக
காரியம் தொடங்கும் நல்ல
கருத்தினர் ஐவர் வந்து,
சீரிய தமிழரே, ஓ!
செந்தமிழ் நாட்டா ரே, எம்
கோரிக்கை ஒன்று கேட்பீர்
என்றங்கே கூவினார்கள்.
தென்னாட்டு வணிக ரான
செல்வர்கள் அதனைக் கேட்டே,
என்னென் றுசாவ, அங்கே
ஒருங்கேவத் தீண்டி னார்கள்.
" அன்புள்ள தென்னாட் டாரே,
யாகத்துக் காகக் கொஞ்சம்
பொன்தரக் கோரு கின்றோம்;
புரிகஇத் தருமம் " என்றே
வந்தவர் கூறக், கேட்டே
மாத்தமிழ் வணிக ரெல்லாம்
சித்தித்தார் பொன்மு டிக்குச்
சேதியைத் தெரிவித் தார்கள்.
வந்தனன் அன்னோன். என்ன
வழக்கென்று கேட்டு நின்றன்.
பந்தியாய் ஆரி யர்கள்
பரிவுடன் உரைக்க லானார்;
54