பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

சிதம்பரம் சென்று திரும்பிய குருபரன்

புள்ளிருக்கும் வேளூர் போய்ப்
புனைமுத்துக் குமரன் மீது

பிள்ளை நூல்பாடி, மன்றில்
பெம்மானை மும்மணிச் சொல்

தெள்ளுநீர் ஆட்டிப், பின்னும்
சிதம்பரச் செய்யுட் கோவை,

அம்மைக் கிரட்டை மாலை
அருளினான் இருனொன் றில்லான்

மூளும் அன்பாற் பண்டார
மும்மணிக் கோவை கொண்டு

ஆளுடை ஞானா சானின்
அடிமலர் தொழுது பாடி,

நீளுறப் பரிசாய்ப் பெற்ற
நெடுநிதி அனைத்தும் வைத்து,

மீளவும் தொழும் சீடன்பால்
விளம்புவான் ஞான மூர்த்தி;

74