இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
“அப்பனே, இது கேள், இந்த
அரும்பொருள் அளைத்தும் கொண்டு
செப்பிடும் வடதா டேகிச்
சிவ தருமங்கள் செய்க!
அப்பாங்கில் உள்ளா ரெல்லாம்
அசைவர்கள், உயிர் வதைப்போர்;
தப்பிலாச் சைவம் சார்ந்தால்
அன்பிலே தழைத்து வாழ்வார்.
சைவநன் மடா லயங்கள்
தாபிக்க! கோயில் காண்க!
தைவார்க்குச் சிவ பிராளின்
தாமத்தால் உஉலாவு நல்கும்
சைவசத் திரங்கள் காண்க!
தடாகங்கள் பூந் தோட்டங்கள்
உய்வாக, உயிரி வேந்தன்
உவப்புறச் செய்து மீள்க!”
என்று தேசிகனார் சொல்லி
இனிதாக ஆசி கூறி,
நன்றெரு துறவு காட்டிக்
காவியும் நல்கி, ஆங்கே
"இன்னெடு வட தேசந்தான்
எம்பிரான் இருக்கை யாகித்,
தென்றமிழ் நாட்டினைப் போல்
சிறப்பெலாம் எய்த" என்றார்.
75