பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


15
தானாய்த் தோன்றிய தாழம்பூ


‘தினத்தந்தி’யிலிருந்து தொடர்கதை எழுதும்படி ஒரு அழைப்பு வந்தது. நான் சிறிது தயங்கினேன். ‘தினத்தந்தி’ வாசகர்கள் அளவிற்கு கீழே இறங்கிப் போய் கதை சொல்ல முடியுமா என்று யோசித்தேன். வழக்கமான பார்முலா கதைகளை படித்துப் பழக்கப்பட்ட அடிமட்ட வாசகர்களிடம் என் எழுத்து எடுபடாது என்பது இப்போதும் என் நம்பிக்கை. ஆனால், பல நண்பர்கள் இப்படிப்பட்ட சமூகத்தின் அடிமட்ட வாசக, வாசகிகளின் மனோபாவத்தையும் ரசனையையும் மாற்றுவதற்காவது நான் எழுத வேண்டும் என்றார்கள். அதோடு ஒரு எழுத்தாளனின் எழுத்து சராசரி வாசகனுக்கு புரிந்தால்தான் அந்த எழுத்திற்கு ஒரு நோக்கம் உண்டு என்றும் வாதித்தார்கள். இறுதியில் நானும் தொடர்கதை எழுத உடன்பட்டேன்.

அடையாறில் கடற்கரையில் உட்கார்ந்து தொடர்