பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

கூடாரத்தினுள்ளே, பக்கத்தில் இருந்த கோவலனின் உள்ளம் குழைய மாதவி பாடியது, “மாரு பல்கா, கொன்னாவே ஏமிரா" வுமல்ல; "சல்சல்ரே, நவ்ஜவா"னுமல்ல! தமிழ்! இன்று, தமிழ் இசை போதுமான அளவு இல்லை என்று கூறும் நிலை வந்தது. காரணம் என்ன?

தமிழர், இசையை வளர்த்தது போல், வேறு இனத்தவர் வளர்க்கவுமில்லை: தமிழர் இசையை இழந்தது போல் வேறு யாரும் இழக்கவுமில்லை. தமிழனின் இன்றைய நிலை இழந்த இன்பத்தைப்பற்றி, எண்ணி ஏங்குவதாகவே இருக்கிறது.

தமிழிலே நல்ல பாடல்கள் இல்லை என்பதைக் கேட்கும் தமிழன், தமிழ் இசை முன்னம் இருந்த தன்மையை அறிந்தால், தலையைக் கவிழ்த்துக்கொள்ளத்தான் வேண்டி வரும். அத்தகைய இசை இருந்தது.—இன்று மறைந்தது! மறைந்தது மீண்டும் வெளிப்பட, இன்று முயற்சிகள் செய்யப்படுகின்றன; அந்த மொகஞ்சதாரோவைக் கண்டு, ஆரியர்கள் மருளுகின்றனர்.

"தமிழர் காட்டுமிராண்டிக் கூட்டம். அவர்களுக்கு நாங்களே நாகரீக போதனை செய்தோம். தமிழர் மொழி வளமறியாக் கூட்டம். நாங்களே நூற்கள் வகுத்தோம். தமிழர் வாழும் முறை தெரியாக் கூட்டம், நாங்களே அவர்களுக்குச் சட்டதிட்டம், கட்டு, காவல், கற்றுக் கொடுத்தோம் என்று ஆரியர் கூறினர் ஆங்கிலேயரிடம். புத்தகங்களில் எழுதினர்; பொதுக் கூட்டங்களில் பேசினர். தமிழருக்கு ஆசான், ஆரியரே என்று வெளி நாட்டாரிடம் கூறவே, வெளிநாட்டார், தமிழரை, ஓர் "லம்பாடிக்" கூட்டம் என்றே எண்ணினர். ஒரு ராகவ ஐயங்கார், தமிழருக்குக் "கற்பு" என்பதே தெரியாது என்றும் கூறத் துணிந்தார்!

ஜெர்மன் நாட்டு பாக்ஸ் முல்லர், ஆரியவர்த்தம், ஆரிய மொழி, ஆரிய நாகரீகம், ஆரிய மதம் என்பவைகளையே