பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

எனவே தான் அங்கு, எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது. இந்தக் கடுப்பைப் பொருட்படுத்தாமல், புதிய எழுச்சிக்காகப் போரிடும் முன்னனிப்படையினர், தேசத் துரோகி, வகுப்புவாதி என்று ஏசப்பட்டுத், தூற்றப்பட்டு வருகின்றனர். ஆனால் அந்த முன்னணிப்படை போட்டுவைக்கப் போகும் பாதையிலே பட்டாளங்கள் பலப்பல பிறகு நடக்கும். மக்கள் மகிழ்ச்சியோடு அந்தப் பாதையிலே நடந்து, புதூர் சென்று வாழ்வார் என்பது திண்ணம்.

           *                 *                *

தமிழரின் மறுமலர்ச்சியே, தமிழில் ஏன் பிறமொழி கலக்க வேண்டும்? என்று கேட்கச் சொல்கிறது.

தமிழரின் மறுமலர்ச்சியே, தமிழகத்திலே இந்தி கட்டாயப் பாடமா? என்று கிளர்ச்சி நடத்தச் சொல்லிற்று.

அந்த மறுமலர்ச்சியே மார்க்கத் துறையிலே, ஆரிய ஆபாசங்கள் கூடாது என்று தைரியமாக எடுத்துக் கூறச் சொல்லிற்று. சமுதாயத்துறையிலே, நீ உயர்ந்தவன். நான் தாழ்ந்தவன் என்ற பேதம் கூடாது என்று கூறச் சொல்லிற்று.

இத்தகைய ஒவ்வொரு முயற்சிக்கும் ஆரியர்கள் கூடி தமிழரைக் கண்டிக்கின்றனர். தமிழ் இசைக்கு ஆதரவு தரவேண்டு மெனப்படும் முயற்சியைக் கண்டித்து, சின்னாட்களுக்கு முன்னம், சென்னை இரானடே மண்டபத்தில் ஆரியர்கள் பேசினர். அவர்கள் வெளியிட்ட கருத்து சங்கீதத்துக்கு நாதம் தான் பிரதானம். ஆகவே, எந்த மொழியில் சாஹிந்தியம் இருக்கிறது என்பது பற்றிக் கவலை இல்லை. தெலுங்குக் கிருதிகள் இப்பவை நல்லவை. தமிழ்ப் பாடல்களைத் தேடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. தியாகய்யர் போலத் தமிழகத்திலே ஒருவர் தோன்றியதும், தமிழ்ப் பாடல்கள் உண்டாகும்-என்பதாகும்.

இசையை, மக்கள் கேட்டு இன்புறவேண்டுமானால், அவர்களுக்குத் தெரிந்த மொழியில் சாஹித்தியம் இருந்தால்