இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கி. ஆ. பெ. விசுவநாதம் □ 71
இம்மூவரையும் தமிழ் மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை. இது தமிழ்நாடு செய்த பெருந்தவறேயாகும்.
அடிகளின் தனித்தமிழ் உணர்ச்சியும், திரு. வி. க. வின் இலக்கிய உணர்ச்சியும், பாரதியார் அவர்களின் வீர உணர்ச்சியும் தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழகத்திற்கும் தேவை.
பணம் படைத்தவருள் எவரேனும் ஒருவர், நல்ல மனம் படைத்து, இம் மூவரிடத்தும் ஆறு புலவர்களை அனுப்பி, அவர்கள் தம் உள்ளத்தே ஆய்ந்து, தேடி, முடக்கி வைத்திருக்கும் அரும் புதையல்களை வெளிக் கிளப்பி, எழுதி, வெளியிட்டு, நாட்டிற்கு அளித்து நல்வாழ்வு வாழ வேண்டும் என்பது நமது ஆசை.
வாழ்க மூவர் வாழ்க தமிழ்மொழி!
—தமிழர்நாடு, 21—12—1947