பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

319

 வர்களில் டாக்டரும் ஒருவர். எனவே இப்போது மீண்டும் கம்பெனியைத் தொடங்கியதால் அவர் உற்சாகத்தோடு தேவையான உதவிகளைச் செய்தார்.

கொட்டகை வாடகை, விளம்பரம் முதலிய செலவுகளுக்குப் பயந்து பெரிய நகரங்களுக்குச் செல்லவில்லை. சிறிய ஊர்களுக்கே சென்றுவந்தோம். இம்முறை கம்பெனி முன்னேறிச் செல்லாவிட்டாலும் பின்னோக்கிப் போகவில்லை. நம்பிக்கையளிக் கும் முறையில் நடை பெற்றுவந்தது.

ஜூபிடர் அழைப்பு

தாராபுரத்தில் நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது மேனகா படத்தில் பங்காளிகளாக இருந்த எஸ். கே. மொய்தீனும், எம்.சோமசுந்தரமும் வந்தார்கள். தாங்கள் ஜூபிடர் பிகசர்ஸ் என்னும் பெயரால் ஒரு படக் கம்பெனியைத் துவக்கியிருப்பதாகவும் சந்திர காந்தா நாடகத்தைப் படமெடுக்கப் போவதாகவும் கூறினார்கள். அப்போது நாங்கள் சந்திரகாந்தா நாடகத்தை நிறுத்தியிருந்தோம். என்னையும் தம்பி பகவதியையும் சுண்டுர் இளவரசனுக்கும் ராகவரெட்டிக்கும் ஒப்பந்தம் செய்ய விருப்புவதாகச் சொல்லி, அந்த நாடகத்தை ஒருமுறை பார்க்க வேண்டுமென்றும் கூறினார்கள். அப்போது சந்திரகாந்தா நாடகத்துக்குரிய காட்சியமைப்புகள் எதுவும் இல்லை. என்றாலும் அவர்கள் வேண்டுதலை மறுக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு நாடகத்தைத் தாயாரித்தோம். சந்திரகாந்தா நாடகம் ஒருநாள் நடந்தது. ஜூபிடர் பிக்சர்ஸார், சந்திரகாந்தா நாவலின் ஆசிரியர் ஜே. ஆர். ரங்கராஜு முதலியோர் நாடகத்தைப் பார்த்தார்கள். நாடகம் முடிந்த பிறகு சென்னைக்குப்போய் விபரமாகக் கடிதம் எழுதுவதாகக் கூறிச் சென்றார்கள். சந்திர காந்தாவுக்கு டைரக்டராக ராஜா சாண்டோவையே ஏற்பாடு செய்திருந்தார்கள்.அவர் எங்கள் நால்வரையும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனையும் அவசியம் ஏற்படு செய்யும்படி சொல்லி யிருந்தாராம். இரண்டு மூன்று தினங்களுக்குப் பின் ஜூபிடரிலிருந்து கடிதம் வந்தது.