பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரியதர்சனி 7

என் வயதுக்கேற்ப, நோய்வாய்ப்பட்டு நாளடைவில் தேய்ந்து, ஒருநாள் மாய்ந்துபோவதில் நியதியிருக்கிறது. ஆனால், இப்படிப்பட்ட மரம் துளிர்க்கும் இன்ப வதையில் நியதி இல்லை. ஆனால் இதுதான் உன் லீலை.

மது படும் வேதனைக்கு மனம் பரிதபிக்கின்றது. ஆனால் அங்கு நியதி தெரிகிறது. அவன் வயதுக்கு நேரும் நோய் வாய்ப்பட்டுத்தான் ஆகணும். ஆனால், மனம் பரிதபிக் கிறது. சாயங்காலே-சாயங்காலம் அதன் அச்சங்களுடன், நாளை எனும் அநிச்சியத்துடன், மங்கல்களுடன் பூஜை அலமாரிக்கெதிரே நிற்கிறேன் உன் படத்துக்கெதிரே என் தாபத்தினின்று விடுபட உன் காலிலேயே விழுகிறேன்:

அவள் தன் உற்சாகமான பக்தியில், உன் படத்துக்கு மஞ்சள் கோர்த்த மஞ்சள் சருகு அணிவித் திருக்கிறாள். அதன மங்கலமான வேலியின் பத்திரத்தில் நின்றுகொண்டு என்னைச் சிரிக்கிறாய்.

ஆ-- இப்போது உன் எதிரே நிற்கையில் கிணற்றில் தோன்றிய பிம்பம் யார் என்று ஒரளவு யூகிக்கத் தோன்று கிறது. படலம் விலகுகிறதா?

ஜன்மம் எனும் முடிவற்ற நினைவு அதில் எங்கோ எப்பவோ புதைவுண்ட எண்ணமாய் நீ உன் படுகையினின்று: உன் வேளையில் கிணற்றுள் பிம்பமாய் மேல் வந்து மிதந்து, அந்த சலனத்திலேயே மறைந்தும் போய், உன் ஒளிவிலிருந்து வாட்டுகிறாய். அப்படித்தானே? சமாதானங்களை இப்படித் தான் செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் நீ நிகு பனைக்கு அப்பாற்பட்ட வள்.

மதுவைப் பார்க்க சஹறிக்கவில்லை. என் கண்ணுக்குப் பாதியாகிவிட்டான். கண்களைச் சுற்றிக் கறுப்பு வளை யங்கள். நின்றவிடத்தில் நிற்கிறான். நாலடி நடந்து மலைக்கிறான். கண்ணுக்கெதிரே இளைக்கிறான். மது, என்னடா செய்வேன்-செய்வோம்? -