47 0 முருகுகந்தரம் காட்சி 8
இடம் : பல்கலைக் கழகம், மரநிழல் நேரம் : மாலை
உறுப்பினர் : நம்பி, வினா
பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பெரிய ஏரி. அதை இரண்டாகப் பிளந்து செல்கிறது ஒரு பாதை. அப்பாதையின் இருமருங்கிலும் வரிசையாகக் கொன்றை மரங்களும், புன்கு மரங்களும் நிழல் பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஏரிக்கரை யோரமாகப் போடப்பட்டிருக்கும் இருக்கையில் நம்பியும் வீணாவும் அமர்ந்திருக்கின்றனர். வீணா கையில் உள்ள சிறுகற்களை ஒவ்வொன்றாக ஏரிநீருக்குள் போட்டு, அது உண்டாக்கும் வட்டங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். நம்பி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறான். நம்பி:
என்ன விண்ா!
ஆழ்ந்த அமைதியில்
அகப்பட்டிருக்கிறாய்!
வின:
என் உள்ளம்
அருவியாற்றங்கரையில்
அலைந்துகொண்டிருக்கிறது. நம்பி.
அருவியாறா?
வினா:
ஆமாம்?
ஈழத்தில்
மன்னார் மாவட்டத்தில்
இருக்கிறது.
அதன் கரையில் தான்
எங்கள் வீடு