பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கிய ஆதாரங்கள்

99



   தெள்ளத் தெளிந்தவர் செய்தக்க
       தோர் முறை செய்யிலையா
   எள்ளத் தனைமலை யத்தனை
       யாம் என்பதின்றறிந்தோம்
   உள்ளற் கரிய துடையர்டை
       கீறிய தொன்றுமொரு
   வள்ளல் தகைமையொ டொத்துள
       தால்தொண்டை மண்டலமே.

புலவர் செய்த சோதனை :

இவ் வரலாற்றுக்கு ஆதாரம் கொங்குமண்டல சதகம், 51-ஆம் பாடல்.

   திருத்து புகழ்பெறும் ஆணுாரிற்
       சர்க்கரை செந்தமிழோன்
   விருத்த முடன் அன்னை மேல்ஏறத்
       தாய்வெகு ளாமல்எனைப்
   பொருத்த முடன் பத்து மாதம்
       சுமந்து பொறையுயிர்த்தாய்
   வருத்தம் இதில்என்ன என்றான்
       அவன்கொங்கு மண்டலமே.

இதற்கு மேற்கோளாக, இச் சதகத்தின் பதிப்பாசிரியராகிய ஸ்ரீ தி. அ. முத்துசாமிக்கோனார்,

   அன்னைவெரிந் மேற்கொளச்சேய்
       ஆனனத்தை நோக்குதலும்
   என்னைஈ ரைந்துதிங்கள்
       இன்பமாய்ச் சுமந்தீரே
   இவரை ஒருநிமிட
       மேசுமப்பீர் என்றுரைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/107&oldid=1530034" இலிருந்து மீள்விக்கப்பட்டது