இந்தியர்
என்னருமைத் தம்பி, தங்காய்! வாருங்கள், இக் கருத்தரங்கிற்கு. எல்லோரும் வாழ்வோம். நன்றாக வாழ்வோம். ஒன்றாக வாழ்வோம்.
இதுவே சிறந்த கொள்கை. நல்லோர். கொள்கை. நம் முன்னேர் கொள்கை. வாழ்ந்து சிறந்த முன்னோர் கொள்கை. எக் காலத்திற்கும் ஏற்ற கொள்கை. இதை உணருங்கள்; உணர்த்துங்கள். உடும்புப் பிடியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள்.
“சரி” என்று உங்கள் நெஞ்சம் ஏற்கிறதா? மகிழ்ச்சி.
எப்படித் தெரிகிறது என்று மலைக்காதீர்கள். அதோ உங்கள் கண்களைக் கேளுங்கள். அவை காட்டிக்கொடுத்து விட்டன.
நாம் மேலும் சிந்திப்போம், உடன் பிறந் தோரே! நாம் எந்த இனமாக வாழப் போகிறோம்? புல் பூண்டாக அல்ல. இதுவன்றோ உங்கள் முடிவு? நல்லது.
மயிலாகக் குயிலாக வாழ விருப்பமா? ’இல்லை, இல்லை’ என்கிறீர்களா? போற்றுகிறேன்.
பரியாகக் கரியாக வாழலாமா நாம்? ’ஆகாது, ஆகாது’ என்று சொல்லாமற் சொல்லுகிறீர்கள், அப்படித்தானே! ஏற்றுக் கொள்கிறேன்.
"எடுத்தது மக்கட் பிறவி. இருப்பதும் மக்கட் பிறவியாக இருக்கட்டும். நினைப்பதும் மக்கள் இன நினைப்பாக இருக்கட்டும். நடப்பதும் மக்கள் இன