பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 போக விடக்கூடாது. மாடுமேய்க்க ஆடுமேய்க்க சிறுவர் சிறுமியரை விடக்கூடாது. குழந்தை யைக் காக்க, வீட்டைப் பெருக்க, சிற்ருள் வேலை செய்ய, படிக்கும் வயதினரை அமர்த்தக் கூடாது. அனுமதிக்கக் கூடாது. பதின்மூன்று வயது முடிய பைய்னும் பெண்ணும், எல்லோர் வீட்டுப் பையனும் பெண்ணும் கற்பதிலே ஈடுபட்டிருக்க வேண்டும். பிழைக்கப் பொருள் தேடுவதிலேயே ஈடு படக் கூடாது. அத்தகைய சூழ்நிலையை விரைவிலே உருவாக்க வேண்டும். அதற்கு நம்மைப் படைக்க வேண்டும். அதை இவ்வாண்டு குழந்தைகள் நாளிலே உறுதிப்படுத்துவோமா? பிடி அரிசி எடுத்து வைத்துப் பள்ளிப் பகலுன வைப் பலப்படுத்துவோமா? ரூபாய்க்கு ஒரு காசு ஒதுக்கி வைத்து உடை தானத்திற்கு, கல்வி தானத் திற்கு உதவுவோமா? எல்லோரும் கற்க எல்லோரும் உழைத்து, எல்லோரும் உதவி, எல்லோரும் வாழ் வதே நேருவிற்கு அஞ்சலி.