பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 5 தட்டுப்பாடு என்றதும், உலகத்தில் எத்தனை நாடுகள் இதோ எங்கள் உதவி, எங்கள் உதவி' என்று விரைந்து அளிக்கின்றன. நாளை, பிற கோள்களுக்கும் செல்ல வாய்ப்பு வளர்கிறது. எவ்வுணர்ச்சியோடு செல்ல? எதற்குச் செல்ல? நல்லுணர்ச்சியோடு செல்ல வாய்ப்புகள் பெருகுகின்றன. அருள் உணர்ச்சியோடு செல்ல வாய்ப்புகள் வளர்கின்றன. கேட்டு வாங்க மட்டுமல்ல, கொடுத்துவிட்டு வரவும், தொண்டு செய்து உதவவும் வாய்ப்புகள் வருகின்றன. இந்நிலையில், காலமறிந்து நடவாதான், கோலமறியாக் குரங்காவான். நாம் காலமறிந்து நடப்போமாக.போர்க்காலம் அன்று; இன்றல்ல, நாளையுமல்ல. போர்க்கொடி நம் மூதாதையர் கொடி. அருட் கொடி நம் கொடி. வாளும் வேலும் அக் கால மக்களுக்குப் பொருந்தின, வென்றுவர வாளும் வேலும். எதிர்காலத்திற்கு, குண்டும் கணையும் என்று நினைத்து விடாதீர்கள். குண்டும் கணையும் வருங்கால மக்க ளுக்குப் பொருந்தா. குளிகையும் குழையும் எதிர் காலத் தேவை. உழவுப் பொறியும், தொழிற் பொறியும் எதிர்காலத் தேவை, உடன் பிறந் தோரே! எதிர்கால உலகம் தொண்டு உலகம் என்பதை மறக்க வேண்டாம். அத் தொண்டு உலகம் உங்களையும் என்னையும் அழைக்கிறது. சுரண்ட அழைக்கவில்லை; சுருட்ட அழைக்கவில்லை; தலைகளை உருட்ட அழைக்கவில்லை; வலைகளை வீச அழைக்கவில்லை. நல்லறிவைக் கொடுக்க, நல்லு ணர்ச்சியை ஊட்ட, நற்ருெண்டைச் செய்ய நாணி