பக்கம்:எழிலோவியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15



6

 
ழியெலாம் தென்னை புன்னை!
மணல்மேடு! நொச்சிக் காடு!
கழியெலாம் பாசிப் போர்வை!
கண்ணெலாம் நெய்தல் ஆற்றுச்
சுழியெலாம் உப்பின் தேக்கம்!
துறையெலாம் கவிச்சி நாற்றம்!
எழிலோவி யத்தைக் காட்டும்
நெய்தலின் இயற்கைக் காட்சி!



7


நொச்சிசேர் வேலி ஒரம்
பலநூறு பொத்தல் ஏற்ற
குச்சிகள் ! குச்சி மீதோ
சுரைக்கொடிக் குடுக்கைக் காய்கள்
உச்சியில் கிடக்கும் வீட்டின்
ஓரமே பொழுது போக்காம் !
அச்சமே வாழ்வு! சேரி
அன்பெழில் ஓவி யம்மே!



8


ந்தியில் ஒவ்வொன் றாக
வானத்தை அடைந்த மீன்கள்
சிந்தையை அள்ளும்! வானம்
செல்லுண்ட குடைபோல் தோன்றும்
வந்தது நிலவே! இன்பம்
வந்ததே! உயிர்மெய் மீது
சிந்திய ஒளிதீட் டாத
ஓவியச் செம்மை காணிர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/16&oldid=1301940" இலிருந்து மீள்விக்கப்பட்டது