பக்கம்:எழிலோவியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஞாயிறு

1

பொன்னொளி வீச்சே! வானப்
புதையலே! இருண்ட நாட்டின்
பொன்னொளி விளக்கே! மூசைப்
புடமிட்ட கட்டிப் பொன்னே!
பொன்னொளி யூற்றே! மக்கள்
புதுவாழ்வே! சிரிப்பே வற்றாப்
பொன்னொளி யமுதே! பூத்த
ஞாயிறே! வாராய்! வாராய்!

2


ளிக்கெலாம் உயிர்நீ! வாழும்
உயிர்க்கெலாம் உயிர்நீ! வீசும்
வளிக்கெலாம் உயிர்நீ! மக்கள்
வாழ்விற்கும் உயிர்நீ! ஆவாய்!
களிப்பொருள் நீயே! வானக்
கருப்பொருள் நீயே! இன்பம்
துளிர்த்திட அழகை பூட்டும்
ஞாயிறே! சுடர்க்கோ மானே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/18&oldid=1397929" இலிருந்து மீள்விக்கப்பட்டது