பக்கம்:எழிலோவியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20


9

காற்றினில் நெளியும் பட்டுச்
சேலையாய்க் கடற்ப ரப்பை
மாற்றுவாய்; மலையின் உச்சி
செந்தீயை வளர்ப்பாய்; தங்கச்
சேற்றினில், குருதி யாற்றில்
சுழல்கின்ற திகிரி யொத்த
தோற்றத்தை அடடா ! என்ன
சொல்லுவேன் ! சொல்லு வேனே!!


10

திங்களும், வானில் அள்ளித்
தெளித்திட்ட மணியாம் மீனும்
செங்கதிர்ச் செல்வ னே !உன்
பெரும்படைக் கூட்டங் தானோ ?
எங்கெங்கும் உனது செங்கோல் ?
எங்காடும் உனது நாடாம் !
அங்கெலாம் தமிழ ரன்னத்
தங்காட்டை மறந்தா ருண்டோ ?



------
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/21&oldid=1301956" இலிருந்து மீள்விக்கப்பட்டது