பக்கம்:எழிலோவியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30



3

சீழ்க்கையை அடித்த டித்தே
அழைத்தது மஞ்சட் சிட்டு !
நோக்கின கண்கள்; கோட்டு
நுனியெலாம் புள்ளின் கூடு !
காக்கைகள் தத்தம் கூண்டில்
கால்வைத்த குயிலைச் சேர்ந்து
தாக்கின ! இனப்போர் கண்டேன்!
தமிழக முன்னாள் கண்டேன் !!

4


புதரின விலக்கி உள்ளே
புகுந்தனன்; புகுந்த தின்பம் !
எதிரினில் பூத்த கொன்றை,
கடம்பு, வேல், இலங்தை, ஆச்சா
குதிரைகள் பூட்டாப் பூந்தேர் !
குளிர்மணப் பூக்கள் வாரி
உதிர்த்தில்லாள் ஆளன் நோக்கும்
உயர்மெத்தை சருகு மெத்தை !

5


முதலையின் உடல்வண் ணம்போல்
முதிர்மரப் பட்டை கள்ளிப்
புதரெலாம் பிரண்டைப் போர்வை !
புரையோடிச் செறித்த ஆலின்
முதலினை அரிக்கும் செல்லோ
முழுவர கரிசி ! தாங்கும்
மதலைகள் விழுது ! கெம்பு
மரகதம் கோவைச் செங்காய் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/31&oldid=1301996" இலிருந்து மீள்விக்கப்பட்டது