பக்கம்:எழிலோவியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

9

பெயல்கண்டு சினந்த யானை
பிளிறிடும் ஒர்பால்; தோகை
மயிலாடும் ஓர்பால் ! புள்ளி
மாங்குயில் பாடும் ஒர்பால் !
முயல்கள்ளி இலையாம் காதை
முன்தூக்கிப் பாயும் ஒர்பால் !
வயல்வெளி மணிப்பு றாக்கள்
வாழ்த்தொலி அனுப்பும் ஓர்பால் !

10



கிடைத்தபோ துண்டு, சோறு
கிடைக்காத போது சோங்கி
நடுத்தெரு வாழும் ஏழை
மக்கள்போல் நாளும் வானம்
கொடுத்தபோ துண்டு வெய்யில்
கொளுத்தும்போ தேற்றுச் சோங்கி
அடுத்தவர்க் குதவி செய்தே
அழிவேற்றுக் கிடக்கும் காடே !

----: :----

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/33&oldid=1301974" இலிருந்து மீள்விக்கப்பட்டது